/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
'ஜல் ஜீவன்' திட்டத்தில் மீட்டர் பொருத்தும் பணியால் குழப்பம் பயன்பாடு இல்லாததை பொருத்துவது வீண்
/
'ஜல் ஜீவன்' திட்டத்தில் மீட்டர் பொருத்தும் பணியால் குழப்பம் பயன்பாடு இல்லாததை பொருத்துவது வீண்
'ஜல் ஜீவன்' திட்டத்தில் மீட்டர் பொருத்தும் பணியால் குழப்பம் பயன்பாடு இல்லாததை பொருத்துவது வீண்
'ஜல் ஜீவன்' திட்டத்தில் மீட்டர் பொருத்தும் பணியால் குழப்பம் பயன்பாடு இல்லாததை பொருத்துவது வீண்
ADDED : டிச 06, 2024 06:05 AM
கம்பம்,: நகராட்சி,பேரூராட்சிகளில் 'ஜல் ஜீவன்' திட்டத்தின் கீழ் வழங்கும் குடிநீர் இணைப்புகளைக்கு மீட்டர் பொருத்தும் பணி பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.
ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் தினமும், தட்டுப்பாடு இன்றி வினியோகிக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு 'ஜல் ஜீவன்' திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த திட்டத்திற்கு நிதி மத்திய, மாநில அரசுகள் பகிர்ந்தளிக்கிறது. இத் திட்டம் முதலில் ஊராட்சிகள், தற்போது பேரூராட்சிகள், நகராட்சிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதில் பகிர்மான குழாய் பதிப்பது, மேல்நிலைத் தொட்டிகள் கட்டுவது, புதிய உறை கிணறுகள் அமைப்பது, குடிநீர் இணைப்பு இல்லாத வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஊராட்சிகளை தவிர்த்து தற்போது பேரூராட்சிகளில் குடிநீர் மீட்டர் பொருத்தி வருகின்றனர். இது பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.
இது குறித்து உத்தமபாளையம் பேரூராட்சியில் விசாரித்த போது, ஏற்கெனவே பேரூராட்சி கூட்டத்தில் அனுமதிக்கப்பட்ட கட்டணம் தான் வசூலிக்கப்படும். ஜல் ஜீவன் ஒப்பந்தத்தில் மீட்டர் மதிப்பீட்டு தொகையில் சேர்த்துள்ளதால் பொருத்துகின்றனர். ஆனால் மீட்டர்களை பயன்படுத்தும் திட்டம் இல்லை. என்கின்றனர். பயன்பாடு இருந்தால் மீட்டர் பொருத்தலாம். பயன் இல்லாத போது மீட்டர் பொருத்துவது வீண் செலவாகும்.
மாவட்டத்தில் சின்னமனூர், போடி, தேனி நகராட்சிகளில் மட்டுமின்றி பேரூராட்சிகளிலும் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. இவை காட்சி பொருளாக இருக்க ஏன் மீட்டர் பொருத்த வேண்டும் என்பது தெரியவில்லை. சமூக விரோதிகள் மீட்டர்களை பல இடங்களில் திருடி செல்வதாகவும் புகார் எழுந்துள்ளது. நிதி வீணடிக்கப்படுவதை தவிர்க்க அரசு மீட்டர் பொருத்துவதை த்து நிறுத்த வேண்டும்.