ADDED : நவ 18, 2025 04:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி எஸ்.பி., அலுவலகத்தில் காங்., நகரத் தலைவர் கோபிநாத் தலைமையில் கட்சியினர் மனு அளித்தனர். மனுவில், விருதுநகரில் நவ.,15ல் நடந்த அ.தி.மு.க., கட்சிக் கூட்டத்தில் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி காங்கிரஸ் கட்சி பற்றியும், லோக்சபா எதிர்கட்சி தலைவர் ராகுல் ஆகியோரை அவமதிப்பு செய்யும் வகையில் பேசினார்.
இது காங்., கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கமாக உள்ளது. ராஜேந்திரபாலஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரி விக்கப்பட்டிருந்தது.

