sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

தொடர் மழை: சண்முகாநதி அணை நிரம்புவதால் விவசாயிகள் மகிழ்ச்சி

/

தொடர் மழை: சண்முகாநதி அணை நிரம்புவதால் விவசாயிகள் மகிழ்ச்சி

தொடர் மழை: சண்முகாநதி அணை நிரம்புவதால் விவசாயிகள் மகிழ்ச்சி

தொடர் மழை: சண்முகாநதி அணை நிரம்புவதால் விவசாயிகள் மகிழ்ச்சி


ADDED : அக் 27, 2024 04:05 AM

Google News

ADDED : அக் 27, 2024 04:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம் : சண்முகா நதி அணையின் நீர் மட்டம் 51.5 அடியாக உயர்ந்து முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ராயப்பன்பட்டி அருகேயுள்ள சண்முகா நதி அணை மொத்த கொள்ளளவு 52.5 அடியாகும். இதில் 26.5 அடி வரை பாசனத்திற்கு நீரை பயன்படுத்தலாம்.

அணை நீர்மட்டம் 26 அடியாக குறையும் போது பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்படும். இந்த அணையின் நீர் நேரடி பாசனத்திற்கு பயன்படாது. குளங்கள், கண்மாய்கள் நிலத்தடி நீர்மட்டம் உயர பயன்படும். வடகிழக்கு பருவ மழை காலங்களில் அணை நீர்மட்டம் உயரும்.

அணை நீரால் ஆனைமலையன்பட்டி, ராயப்பன்பட்டி, சின்ன ஒவுலாபுரம், கன்னி சேர்வைபட்டி, எரசக்கநாயக்கனுார், வெள்ளையம்மாள்புரம் , ஓடைப்பட்டி வரை உள்ள 1440 ஏக்கர் நிலங்கள் பயன்படும். ஆண்டுதோறும் நவ., தண்ணீர் திறக்கப்படும். விநாடிக்கு 14.47 கன அடி வீதம் 3 மாதங்களுக்கு தண்ணீர் விநியோகிக்கப்படும். தற்போது மேகமலையில் பெய்து வரும் கன மழை காரணமாக அக் . 20 ல், 45.30 அடியாக இருந்த நீர்மட்டம் அக் . 21 ல் 3 கனஅடி நீர் வரத்து துவங்கியது. தொடர்ந்து அக்.. 22ல் 3 , அக். 23 ல் 6 கன அடி, அக். 24 ல் 51 கன அடி, அக். 25 ல் 132 கன அடியாக நீர் வரத்து உயர்ந்தது. இதனால் அணை நீர்மட்டம் 45.30 அடியிலிருந்து 51. 5 அடியாக உயர்ந்துள்ளது. இன்னமும் ஒரு அடி மட்டுமே முழு கொள்ளவை எட்ட தேவைப்படுகிறது. அணையின் நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பாசனத்திற்கு தண்ணீர் திறக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us