ADDED : நவ 06, 2025 07:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: கூட்டுறவுத்துறை சார்பில் கூட்டுவார விழா அடுத்த வாரம் கொண்டாடப்பட உள்ளது.
இதனை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள 74 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் உட்பட 79 கூட்டுறவு சங்கங்கள் சார்பில் 10 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யும் நிகழ்வு துவங்கியது. போடி சிலமலை மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளர் நர்மதா தலைமையில் பனை நடவு விழா நடந்தது. விழாவில் தன்னார்வலர் முருகன், கூட்டுறவு சங்க அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.

