sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மாடு வியாபாரி வெட்டிக்கொலை நண்பர் சரண்

/

மாடு வியாபாரி வெட்டிக்கொலை நண்பர் சரண்

மாடு வியாபாரி வெட்டிக்கொலை நண்பர் சரண்

மாடு வியாபாரி வெட்டிக்கொலை நண்பர் சரண்


ADDED : நவ 18, 2024 04:07 AM

Google News

ADDED : நவ 18, 2024 04:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம்: தேனி மாவட்டம், கம்பம், பாரதியார் நகரைச் சேர்ந்தவர் முத்துக்குமார், 42; அடிமாடுகளை வாங்கி கேரளாவில் இறைச்சிக்காக விற்பனை செய்யும் தொழில் செய்தார். இவரது லாரியை கம்பமெட்டு காலனியில் வசிக்கும், அவரது நண்பர் சதாம் உசேன், 32, ஓட்டி வந்தார்.

இவரும் அடிமாடுகளை வாங்கி விற்கும் தொழில் செய்தார். இருவருக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னை இருந்தது. போலீசார் சமாதானம் செய்தும் தகராறு தொடர்ந்தது.

நேற்று முன்தினம் முத்துக்குமார், சதாம் உசேனை தாக்கினார். அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பினர்.

ஆத்திரமடைந்த சதாம் உசேன், நேற்று அதிகாலை, 3:00 மணியளவில் கம்பம் -- குமுளி பைபாஸ் ரோட்டில் ஒர்க் ஷாப் ஒன்றில் படுத்திருந்த முத்துக்குமாரை, அரிவாளால் சரமாரியாக வெட்டினார். பலத்த காயமடைந்த முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார்.

சதாம் உசேன், கம்பம் வடக்கு போலீசில் சரணடைந்தார். சம்பவம் நடந்த இடம் உத்தமபாளையம் போலீஸ் எல்லைக்குள் வருவதால் சதாம் உசேன் அங்கு ஒப்படைக்கப்பட்டார்.






      Dinamalar
      Follow us