ADDED : டிச 05, 2024 06:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே தெப்பம்பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி இவரது மனைவி கருப்பாயி 50, இவர்களுக்கு நான்கு மகள்கள் உள்ளனர். மூன்று பேருக்கு திருமணம் முடிந்து விட்டது.
10ம் வகுப்பு வரை படித்த 17 வயது மகள் பெற்றோருடன் வீட்டில் இருந்து வந்தார்.
டிசம்பர் 1ல் தோட்டத்திற்கு அனைவரும் வேலைக்கு சென்ற பின் அய்யம்மாள் மட்டும் வீட்டில் இருந்துள்ளார். மாலையில் வீட்டில் வந்து பார்த்தபோது மகளை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. தாய் புகாரில் ராஜதானி போலீசார் சாதிக்கின்றனர்.