ADDED : ஜூலை 22, 2026 12:14 AM
அ நிறம் | அளவு
தேனி: சென்னை திருவெற்றியூர் இர்பான் 29, வழக்கறிஞர். இவர் சென்னை சமூக வலைதள புலனாய்வு போலீசில் சில தினங்களுக்கு முன் புகார் அளித்தார். அதில் சமூக வலைதளங்களில் இஸ்லாமிய மதம் பற்றி மகேந்திரன் 39, அவதுாறு பரப்புவதாக குறிப்பிட்டிருந்தார்.
சென்னை போலீசார் தேனி சைபர் கிரைம் போலீசிற்கு வழக்கை மாற்றினர். தேனி சைபர் கிரைம் போலீசார் சென்னையில் பழவியாபாரம் செய்து வந்த திண்டுக்கல் மாவட்டம், நத்தம் புதுப்பட்டியை சேர்ந்த மகேந்திரனை கைது செய்தனர்.
