sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

நெடுஞ்சாலையில் தேங்கும் மழைநீரை அகற்ற கோரிக்கை

/

நெடுஞ்சாலையில் தேங்கும் மழைநீரை அகற்ற கோரிக்கை

நெடுஞ்சாலையில் தேங்கும் மழைநீரை அகற்ற கோரிக்கை

நெடுஞ்சாலையில் தேங்கும் மழைநீரை அகற்ற கோரிக்கை


ADDED : ஜன 08, 2024 05:08 AM

Google News

ADDED : ஜன 08, 2024 05:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார், : மழை பெய்தவுடன் கூடலுார் மாநில நெடுஞ்சாலையில் குளம் போல் தேங்குவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டி வருகின்றனர்.

கூடலுார் வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் இருந்து தெற்கு மந்தை வாய்க்கால் வரையுள்ள 4 கி.மீ., தூர ரோடு மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு கட்டுப்பட்டதாகும். சமீபத்தில் நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தப்பட்டது. விபத்துக்கள் நடக்காமல் தடுக்க சென்டர் மீடியன் அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் ரோட்டில் இரு பகுதிகளிலும் மழை நீர் வெளியேறும் வகையில் முறையான கழிவு நீரோடை அமைக்காமல் பணிகள் நடந்ததால் சிறிய மழை பெய்தால்கூட நெடுஞ்சாலையில் குளம் போல் தேங்கி விடுகிறது. கருணாநிதி காலனி, எம்.ஜி.ஆர்., காலனி, காய்கறி மார்க்கெட், புது பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வெளியேறாததால் மக்கள் நடந்து செல்ல முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

பல இடங்களில் பணிகள் முழுமை அடையாமல் பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. முழுமையாக ஆக்கிரமிப்புகளும் அகற்றவில்லை. ரோடு சேதம் அடைவதற்கு முன் மழை நீர் தேங்காமல் வெளியேற்ற மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முன் வர வேண்டும்.






      Dinamalar
      Follow us