sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

இடையூறு மேகமலை பகுதியில் மின் கோபுர உயரம் அதிகரிக்கும் பணிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டும் உயரம் அதிகரிக்க முடியாத அவலம்

/

இடையூறு மேகமலை பகுதியில் மின் கோபுர உயரம் அதிகரிக்கும் பணிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டும் உயரம் அதிகரிக்க முடியாத அவலம்

இடையூறு மேகமலை பகுதியில் மின் கோபுர உயரம் அதிகரிக்கும் பணிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டும் உயரம் அதிகரிக்க முடியாத அவலம்

இடையூறு மேகமலை பகுதியில் மின் கோபுர உயரம் அதிகரிக்கும் பணிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டும் உயரம் அதிகரிக்க முடியாத அவலம்


ADDED : ஆக 09, 2025 03:51 AM

Google News

ADDED : ஆக 09, 2025 03:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம்: மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதிகள் வழியாக செல்லும் பெரியாறு - கயத்தாறு மின்வழித் தடத்தில் உள்ள மின்கோபுரங்களின் உயரம் அதிகரிக்கும் பணி மேற்கொள்ள வனத்துறை இடையூறு செய்வதால் பணி தேக்க நிலையில் உள்ளது.

லோயர்கேம்ப் பெரியாறு நீர் மின்நிலையம்,சுருளியாறு நீர் மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், கயத்தாறு மின்வாரிய கிரிட்டுக்கு செல்லும். மேகமலை புலிகள் காப்பக அடர்ந்த வனப்பகுதிகள் வழியாக உயர் மின் அழுத்த வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. பெரியாறு மின் நிலையத்திலிருந்து கயத்தாறு வரை 114 மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கோபுரங்கள் ஒவ்வொன்றும் 100 அடி உயரம் இருக்கும். 5 ஆண்டுகளுக்கு முன்பு சுருளி அருவி அருகில் உள்ள வெண்ணியாறு வனப்பகுதி உள்ள மின்கோபுரம் மீது யானை ஒன்று தும்பிக்கையால் தொட்ட போது மின்சாரம் தாக்கி பலியானது. தொடர்ந்து அதே இடத்தில் 4 யானைகள் பலியானது .

இது தொடர்பாக பொது நல வழக்கு சென்னை ஐகோர்ட்டில் அப்போது தாக்கல் செய்யப்பட்டது. கோர்ட் உத்தரவுப்படி, வனப்பகுதி வழியாக செல்லும் மின் வழிதடத்தில் உள்ள மின்கோபுரங்களின் உயரத்தை உயர்த்த ஐகோர்ட் உத்தரவிட்டது.

மின்வாரியமும் களம் இறங்கியபோது வனத்துறை பல்வேறு நிபந்தனைகளை விதித்தது. மின்வாரிய அதிகாரிகள் கடும் முயற்சியால் 10 கோபுரங்களின் உயரத்தை ( தரையில் இருந்து மின் ஒயரின் கீழ் பாகம் வரை ) 27 அடி வரை உயர்த்தியுள்ளனர்.

டிராக்டர் பாதை இருந்தும் அனுமதியில்லை வெள்ளிமலை பகுதியில் உள்ள 4 கோபுரங்களின் உயரத்தை அதிகரிக்கும் பணிசெய்ய முடியாத நிலையை வனத்துறை ஏற்படுத்தியது. தளவாட பொருள்களை தலைச்சுமையாக கொண்டு செல்ல கூறுகின்றனர். அனைத்து தளவாடங்களும் அதிக எடையுள்ள இரும்பு தளவாடங்களை தலைச்சுமையாக கொண்டு செல்வது இயலாத காரியம். இங்கு டிராக்டர் செல்வதற்கு பாதை வசதி உள்ளது. டிராக்டரில் கொண்டு செல்ல அனுமதியுங்கள் என வாரிய அதிகாரிகள் கெஞ்சி பார்த்தும் அனுமதிக்கவில்லை. இதனால் பணிகள் தேக்கமடைந்துள்ளது.

வழித்தட மின் இழப்பு அதிகம் யானைகள் பலியானது முதல் பெரியாறு மற்றும் சுருளியாறு மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் இந்த கயத்தாறு பாதையில் செல்வது நிறுத்தி வைக்கப்பட்டு, தேனி, ஈரோடு சுற்றி கயத்தாறு செல்கிறது. இதனால் வழித்தட மின் இழப்பு அதிகரிக்கிறது. எனவே மாநில அரசு இந்த விசயத்தில் கவனம் செலுத்தி பெரியாறு - கயத்தாறு மின் பாதையில் கோபுரங்களின் உயரத்தை அதிகரிக்க வனத்துறை அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்.






      Dinamalar
      Follow us