sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கால்வாயில் குவிந்த குப்பையால் கண்மாய்க்கு நீர் செல்வதில் சிரமம்

/

கால்வாயில் குவிந்த குப்பையால் கண்மாய்க்கு நீர் செல்வதில் சிரமம்

கால்வாயில் குவிந்த குப்பையால் கண்மாய்க்கு நீர் செல்வதில் சிரமம்

கால்வாயில் குவிந்த குப்பையால் கண்மாய்க்கு நீர் செல்வதில் சிரமம்


ADDED : மார் 02, 2024 04:56 AM

Google News

ADDED : மார் 02, 2024 04:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி : மூல வைகை ஆற்றில் துரைச்சாமிபுரம் அருகே அமைக்கப்பட்ட தடுப்பணையிலிருந்து வரும் நீர் வரத்து கால்வாயில் சேர்ந்துள்ள குப்பையை அகற்ற நீர்ப்பாசன துறை நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

துரைசாமிபுரம் தடுப்பணையிலிருந்து வரும் கால்வாய் நீர் மரிக்குண்டு, பாலசமுத்திரம், ரங்கசமுத்திரம் கண்மாய்களில் தேங்குகிறது. ஒவ்வொரு கண்மாய்க்கும் இரு நாட்கள் வீதம் முறை வைத்து தண்ணீர் பிரித்து வழங்கப்படுகிறது.

நீர் வரத்து கால்வாய் பராமரிப்பின்றி பல இடங்களில் புதர் மண்டியுள்ளது. விவசாய கழிவுகள், அப்புறப்படுத்தப்பட்ட செடி கொடிகளை கால்வாயில் கொட்டுகின்றனர். கால்வாய் நீரில் அடித்து வரப்படும் குப்பை இவற்றுடன் சேர்ந்து பல இடங்களில் அடைப்பு ஏற்படுத்துகிறது.

இதனால் கண்மாய்க்குச் செல்லும் தண்ணீரின் வேகம் தடைபடுகிறது. குப்பையால் நீர் வரத்து தடைபடும் இடங்களை கண்டறிந்து, குப்பையை அகற்ற நீர் பாசன துறையினர் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us