sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

தேனியில் இருந்து பம்பைக்கு நேரடி பஸ் வசதி தேவை  ; விதியை கூறி போக்குவரத்து அதிகாரிகள் மறுப்பு

/

தேனியில் இருந்து பம்பைக்கு நேரடி பஸ் வசதி தேவை  ; விதியை கூறி போக்குவரத்து அதிகாரிகள் மறுப்பு

தேனியில் இருந்து பம்பைக்கு நேரடி பஸ் வசதி தேவை  ; விதியை கூறி போக்குவரத்து அதிகாரிகள் மறுப்பு

தேனியில் இருந்து பம்பைக்கு நேரடி பஸ் வசதி தேவை  ; விதியை கூறி போக்குவரத்து அதிகாரிகள் மறுப்பு

1


ADDED : அக் 26, 2025 04:19 AM

Google News

ADDED : அக் 26, 2025 04:19 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

: தேனி சபரிமலை செல்லும் பக்தர்கள் பயனடையும் வகையில் தேனியில் இருந்து பம்பைக்கு நேரடி பஸ்கள் இயக்க வேண்டும். இதற்காக தமிழக அரசு விதிமுறைகளை தளர்த்திட வேண்டும் என ஐயப்ப பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல, மகரவிளக்கு பூஜைக்கள் நவ., முதல் ஜன., வரை நடக்கிறது. இப்பூஜை காலங்களில் சுவாமி தரிசனம் செய்ய தமிழகம், பிற மாநிலங்கள் இருந்து பக்தர்கள் சபரிமலை செல்லுகின்றனர். இவர்கள் தேனி மாவட்டம் வழியாக சபரிமலை செல்கின்றனர். தேனியில் இருந்து பம்பை 171 கி.மீ., துாரத்தில் அமைந்துள்ளது. ஆனால்,தேனியில் இருந்து பம்பைக்கு தமிழக அரசு நேரடி பஸ்கள் இயக்குவதில்லை. இதனால் பிற மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள், தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என அனைவரும் குமுளி சென்று அங்கிருந்து பம்பைக்கு கேரள அரசு பஸ்களில் பயணிக்கும் நிலை தொடர்கிறது. சென்னை, திருச்சி பகுதிகளில் இருந்து பம்பைக்கு தேனி வழியாக விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் இயக்கப்படுகிறது. புறப்படும் இடங்களிலே அந்த பஸ்களில் பயணிகள் நிரப்பி விடுகின்றனர்.இதனால் தேனி பஸ் ஸ்டாண்டிற்குள் இந்த பஸ்கள் வருவதில்லை.

தமிழக அதிகாரிகள் ஆர்வமில்லை: தேனி மாவட்டத்திற்கு வாரத்தில் மூன்று நாட்கள் சென்னையில் இருந்து ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் வரும் ஐயப்ப பக்தர்கள் பயனடையும் வகையில் கடந்தாண்டு கேரள அரசு பஸ் தேனி ரயில்வே ஸ்டேஷனில் இருந்து பம்பைக்கு பஸ் இயக்கியது. ஆனால், தமிழக போக்குவரத்து கழக அதிகாரிகள் நேரடி பஸ்கள் இயக்குவதில் ஆர்வம் காட்டுவதில்லை. போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்டால், 'நாங்கள் நேரடி பஸ் இயக்க விதிமுறைகள் இல்லை. போக்குவரத்து வசதி தொடர்பாக நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் எடுத்துரைப்போம். விரைவு போக்குவரத்து கழகத்தினர் தான் பஸ்கள் இயக்க வேண்டும்,' என்கின்றனர். விரைவு போக்குவரத்து கழக அதிகாரி கூறுகையில், 'விதிமுறையின்படி 300 கி.மீ., துாரத்திற்கு மேல் இருந்தால் மட்டும் அதிவிரைவு போக்குவரத்து கழக பஸ்கள் இயக்கப்படும்', என்றார்.

தமிழக அரசு ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக விதிமுறைகளை தளர்த்தி தேனியில் இருந்து பம்பைக்கு நேரடி பஸ்கள் இயக்க நடவடிக்கை வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.






      Dinamalar
      Follow us