/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இட்லிக்கு சட்னி கேட்டு தகராறு: 7 பேர் மீது வழக்கு
/
இட்லிக்கு சட்னி கேட்டு தகராறு: 7 பேர் மீது வழக்கு
ADDED : ஜன 03, 2024 07:02 AM
பெரியகுளம்: ஓட்டலில் இட்லிக்கு சாம்பார், சட்னி கேட்டு ஏற்பட்ட தகராறில் இரு தரப்பைச் சேர்ந்த 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
பெரியகுளம் வடக்கு பூந்தோட்ட தெருவைச் சேர்ந்தவர் பிச்சைமணி 57,இட்லி கடை நடத்தி வருகிறார். பங்களாபட்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெயராஜ் 42, இவரது உறவினர்கள்
சாலைகரை முத்து, முருகன், மணிபால் ஆகிய நால்வரும் ஓட்டலுக்கு சாப்பிட சென்றனர். இட்லி இல்லை என பிச்சைமணி கூறியுள்ளார். பின் தான் சாப்பிட வைத்திருந்த இட்லியை அவர்களுக்கு கொடுத்துள்ளார். அப்போது மேலும் சட்னி, சாம்பார் கேட்டனர். இதில் இருதரப்பினருக்கும் பிரச்னை ஏற்பட்டு ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டனர். இருதரப்பினரும் வடகரை போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தனர்.
பிச்சைமணி புகாரில், ஜெயராஜ், சாலைக்கரை முத்து, முருகன், மணிபால் ஆகிய நான்கு பேரின் மீதும், வழக்கறிஞர் ஜெயராஜ் புகாரில், பிச்சைமணி அவரது இரு மகன்கள், அடையாளம் தெரிந்த எட்டு நபர்கள் மீது வடகரை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தகராறில் இரு தரப்பைச் சேர்ந்த 4 பேர் காயமடைந்தனர்.