sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

சோடா குடிக்க கூடாது; வயிறு நிறைய சாப்பிடக்கூடாது; மலையேறும் பக்தர்களுக்கு டாக்டர்கள் யோசனை

/

சோடா குடிக்க கூடாது; வயிறு நிறைய சாப்பிடக்கூடாது; மலையேறும் பக்தர்களுக்கு டாக்டர்கள் யோசனை

சோடா குடிக்க கூடாது; வயிறு நிறைய சாப்பிடக்கூடாது; மலையேறும் பக்தர்களுக்கு டாக்டர்கள் யோசனை

சோடா குடிக்க கூடாது; வயிறு நிறைய சாப்பிடக்கூடாது; மலையேறும் பக்தர்களுக்கு டாக்டர்கள் யோசனை


ADDED : டிச 01, 2024 07:26 AM

Google News

ADDED : டிச 01, 2024 07:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சபரிமலை, : 'மலையேறும் போது வயிறு நிறைய சாப்பிடக்கூடாது; தண்ணீர் தாகத்துக்கு சோடா குடிப்பதை தவிர்க்க வேண்டும்,' என, சபரிமலையில் மலையேறும் பக்தர்களுக்கு டாக்டர்கள் அறிவுறுத்திஉள்ளனர்.

சபரிமலை வரும் பக்தர்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். மாலை அணிந்து விரதமிருக்கும் போது ஊரில் நடைபயிற்சி உள்ளிட்ட வழக்கமான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

பம்பையில் இருந்து மலை ஏறும் போது மெதுவாக செல்ல வேண்டும். வழக்கத்தை விட அதிகமான உடல் தளர்ச்சி இருப்பதாக கருதினால் ஆங்காங்கே அமர்ந்து ஓய்வெடுத்து மலை ஏற வேண்டும். தேவைப்பட்டால் பக்தர்கள் நடக்கும் பாதையில் அமைக்கப்பட்டுள்ள ஆக்ஸிஜன் பாலர்களை பயன்படுத்த வேண்டும்.

பம்பையில் இருந்து மலையேறுவதற்கு முன் வயிறு நிறைய சாப்பிடாமல், மிதமான உணவு எடுக்க வேண்டும். தண்ணீர் தாகம் எடுத்தால் சோடா போன்றவற்றை குடிப்பதை தவிர்த்து சுடுநீர் குடிக்க வேண்டும். மலை ஏற தொடங்கும் முன்னர் உடல் ரீதியாக ஏதாவது பிரச்னை இருப்பதாக உணர்ந்தால் பம்பை அரசு மருத்துவமனையில் டாக்டர்களிடம் ஆலோசிக்க வேண்டும்.

வழக்கமாக சாப்பிடும் மருந்துகளை சரியான நேரத்தில் உட்கொள்வதுடன் அந்த மருந்துகளுக்கான சீட்டுகளையும் தங்கள் வசம் வைத்துக்கொள்ள வேண்டும். அதிகமான வியர்வை ஏற்படும் போது அதற்கேற்றார் போல் தண்ணீரும் குடிக்க வேண்டும்.

பாம்பு கடிக்கும் நிலை ஏற்பட்டால் உடலை குலுக்காமல் ஓரிடத்தில் அமர்ந்து கொள்ள வேண்டும். பாம்பு கடித்த இடத்தை கத்தி அல்லது பிளேடால் கீறி பெரிதாக்க கூடாது.

கடியேற்ற பகுதியை முறுக்கி கட்டவும் கூடாது. இது ஆபத்தாகும். கடியேற்ற பகுதியை உயரமான இடத்தில் வைப்பதற்கு கவனம் செலுத்த வேண்டும்.

உடனடியாக மருத்துவ கட்டுப்பாட்டு அறை 04735-202 032 என்ற எண்ணுக்கு அழைத்து இருக்கும் இடம், சூழ்நிலை போன்ற விபரங்களை தெரிவிக்கும் பட்சத்தில் அதன் பக்கத்தில் உள்ள மருத்துவ மையத்திலிருந்து ஊழியர்கள் வந்து ஆம்புலன்ஸ் உள்ளிட்ட உதவி செய்வார்கள்.

விபரம் உடனடியாக சன்னிதானம் மற்றும் பம்பை மருத்துவமனைக்கு தெரிவிக்கப்பட்டு அங்கே டாக்டர்கள் தயாராக இருப்பார்கள்.

சபரிமலை மருத்துவ சேவை ஹாட்லைன் உள்ளிட்ட நவீன தொலைத்தொடர்பு வசதிகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாக சன்னிதானம் மருத்துவ கட்டுப்பாடு அதிகாரி டாக்டர் கே.கே.ஷியாம் குமார் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us