sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

ரோடு வசதி இன்றி சிறுவனை டோலியில் துாக்கி வந்து சிகிச்சை

/

ரோடு வசதி இன்றி சிறுவனை டோலியில் துாக்கி வந்து சிகிச்சை

ரோடு வசதி இன்றி சிறுவனை டோலியில் துாக்கி வந்து சிகிச்சை

ரோடு வசதி இன்றி சிறுவனை டோலியில் துாக்கி வந்து சிகிச்சை


ADDED : ஏப் 11, 2025 05:17 AM

Google News

ADDED : ஏப் 11, 2025 05:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

--பெரியகுளம்: சொக்கன் அலையிலிருந்து கண்ணக்கரைக்கு ரோடு வசதி இல்லாததால் மரத்திலிருந்து கீழே விழுந்த சிறுவன் ரஜினி டோலி கட்டி தூக்கி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்.

பெரியகுளத்திலிருந்து 8 கி.மீ., தூரம் சோத்துப்பாறை அணை உள்ளது. அங்கிருந்து அகமலை ஊராட்சிக்கு உட்பட்ட கண்ணக்கரை 6 கி.மீ., தூரத்திற்கு ரோடு உள்ளது. இதே ஊராட்சிக்கு உட்பட்ட சொக்கன் அலையிலிருந்து, கண்ணக்கரைக்கு 2 கி.மீ., தூரத்திற்கு ரோடு வசதி இல்லை.

இந்நிலையில் சொக்கன்அலை பழங்குடியினத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சுரேஷ் மகன் ரஜினி 9. சொக்கன்அலை தோட்டத்தில் மரத்திலிருந்து விழுந்து காயமடைந்தார்.

பெரியகுளம் மருத்துவமனையிலிருந்து சென்ற ஆம்புலன்ஸ் கண்ணக்கரை வரை சென்றது. காயமடைந்த சிறுவனை உறவினர்கள் 5 கி.மீ., தூரம் டோலி கட்டி தூக்கி வந்து ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

ரோடு வசதி இல்லாததால் பழங்குடியினர் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். ரோடு வசதி செய்து தர கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-






      Dinamalar
      Follow us