ADDED : மே 22, 2025 04:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அப்சர்வேட்டி பகுதியைச் சேர்ந்தவர் பெரியநாயகம் 75. தச்சு வேலை வேலை செய்து வந்தார்.
வீட்டில் மதுரைக்கு செல்வதாக கூறி சென்றார். கொடைக்கானலில் இருந்து காட்ரோடு வந்துள்ளார். ரோட்டை கடக்கும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் காயமடைந்தார்.
மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று அங்கு இறந்தார். தேவதானப்பட்டிபோலீசார் விசாரிக்கின்றனர்.-

