ADDED : அக் 18, 2025 04:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: போடி அருகே ராசிங்காபுரம் கரியப்ப கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் சிந்தாமணி 70. இவர் தேவாரம் செல்லும் மெயின் ரோட்டை கடக்க முயன்று உள்ளார். ரோட்டில் வேகமாக வந்த டூவீலர் இவர் மீது மோதியதில் பலத்த காயம் அடைந்தார்.
தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிந்தாமணி மகள் முத்துமணி 40. புகாரில் போடி தாலுகா போலீசார் டூவீலர் விபத்து ஏற்படுத்திய தேவக்குமார் 32. மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.