நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: போடி டி.வி.கே.கே., நகரில் வசிப்பவர் பிரபாகரன் 33. போடி ஜமீன் தோப்பு தெருவை சேர்ந்த கவுதம் 23. டி.வி.கே.கே., நகரை சேர்ந்த செல்வகுமார், சையது உசேன் 28. மூவரும் மது போதையில் பிரபாகரனை தகாத வார்த்தையால் பேசி, கல்லால் அடித்து காயம் ஏற்படுத்தி, கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளனர்.
பிரபாகரன் புகாரில் போடி டவுன் போலீசார் சையது உசேனை கைது செய்து, கவுதம், செல்வக்குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.