ADDED : மே 28, 2025 07:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதால் நீர்நிலைகள், நீர்நிலைகள் கரைகளில் வசிப்போர் எச்சரிக்கையுடன் இருக்க கலெக்டர் ரஞ்ஜீத்சிங் அறிவுறுத்தி உள்ளார்.
குழந்தைகளை நீர்நிலைகளில் விளையாடவோ குளிக்கவோ அனுமதிக்க வேண்டாம்.
இயற்கை பேரிடர் தொடர்பான புகார்களை கட்டுப்பாட்டு அறைக்கு 04546 -261093 என்ற தொலைபேசி எண்ணிலும், வாட்ஸ் ஆப் மூலம் 94877 71077 என்ற அலைபேசி எண்ணிற்கும் கூறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

