sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

தேவாரம் - போடி வரை 18ம் கால்வாய் நீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை

/

தேவாரம் - போடி வரை 18ம் கால்வாய் நீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை

தேவாரம் - போடி வரை 18ம் கால்வாய் நீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை

தேவாரம் - போடி வரை 18ம் கால்வாய் நீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை


ADDED : நவ 20, 2024 06:11 AM

Google News

ADDED : நவ 20, 2024 06:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி : தேவாரம் முதல் போடி வரை 18 ம் கால்வாயை நம்பி உள்ள விவசாய நிலங்கள் பயன் பெறும் வகையில் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட பொதுப் பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

முல்லைப் பெரியாறு அணையிலில் இருந்து தேவாரம், போடி பகுதிகளுக்கு 18ம் கால்வாய் தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். இதன் மூலம் தேவாரம், பொட்டிப்புரம், ராசிங்காபுரம், சிலமலை, சில்லமரத்துப்பட்டி, தர்மத்துப்பட்டி, கரட்டுப்பட்டி வழியாக போடி பரமசிவன் கோயில் பின்புறம் வரை 18ம் கால்வாய் நீர் வந்தடையும். இதன் மூலம் 50 க்கும் மேற்பட்ட கண்மாய்களுக்கு நீர் நிரம்புவதோடு, ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெறும்.

ஒவ்வொரு ஆண்டும் அக்., மாதத்தில் பொதுப்பணிதுறை மூலம் 18ம் கால்வாய் நீர் திறந்து விடுவது வழக்கம். ஆனால் தற்போது வரை தண்ணீர் திறந்து விடவில்லை. இதனால் 18ம் கால்வாய் நீரை மட்டுமே நம்பி உள்ள விவசாயிகள் பெரிதும் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

தேவாரம் முதல் போடி வரை உள்ள 18ம் கால்வாய் உள்ள இணைப்பு கால்வாய்களை தூர் வாரவும், பொட்டிபுரம், ராசிங்காபுரம் முதல் போடி வரை உள்ள குளங்கள் நிரம்பும் வகையில் 18ம் கால்வாய் தண்ணீரை திறந்து விட பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us