ADDED : நவ 20, 2024 05:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தமிழக அரசின் நிலம் ஒருங்கிணைப்பு சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கங்கள் சார்பில் தேனி பழைய பஸ் ஸ்டாண்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் காசி விஸ்வநாதன் தலைமை வகித்தார். தாலுகா தலைவர் ராஜேந்திரன், மொக்கமாயன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர் ராஜப்பன், நிர்வாகிகள் பாண்டியன், சந்திரன், பாண்டி, இந்திய கம்யூ., மாவட்ட நிர்வாகி ராஜ்குமார், தென்னை விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் அம்சராஜ், மணவாளன், வீரபாண்டி உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.