sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மகளுக்கு பாலியல் சீண்டல் தந்தைக்கு ஐந்தாண்டு சிறை

/

மகளுக்கு பாலியல் சீண்டல் தந்தைக்கு ஐந்தாண்டு சிறை

மகளுக்கு பாலியல் சீண்டல் தந்தைக்கு ஐந்தாண்டு சிறை

மகளுக்கு பாலியல் சீண்டல் தந்தைக்கு ஐந்தாண்டு சிறை


ADDED : நவ 09, 2024 02:41 AM

Google News

ADDED : நவ 09, 2024 02:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி:' மகளிடம் பாலியல் அத்துமீறிய 41 வயது கொடூர தந்தைக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை வழங்கி மாவட்ட போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தேனியை சேர்ந்த 34 வயது பெண்ணின் கணவர் பிளக்ஸ் பேனர் வைக்கும் தொழிலாளி 41. இத்தம்பதிக்கு 2 மகள்கள், 1 மகன் உள்ளனர்.

கணவர் குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டதால், தாய் பெரியகுளத்தில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்றார். ஜூலை 6ல் இரவு மது போதையில் வீட்டிற்கு வந்த சரவணன், 2வது மகளை தலைவலிக்கு தைலம் தேய்த்துவிட கூறினார். தைலம் தேய்த்துவிட்ட மகளிடம் தந்தை பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார்.

அதிர்ச்சி அடைந்த மகள் தந்தையை தள்ளிவிட்டு மூத்த சகோதரியை எழுப்பி விபரம் கூறினார். மதுபோதையில் சரவணன் துாங்கிவிட்டார். மறுநாள் மூத்த மகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, 'பள்ளிக்கு தாமதமாக செல்லலாம்' என தந்தை கூறினார். தந்தையின் நடவடிக்கை கண்டு பயந்த 16 வயது மகள் வீட்டில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு ஆட்டோவில் தாய் தங்கியிருந்த பெரியகுளம் சென்று விபரம் கூறினார்.

தாய் தேனி குழந்தைகள் நல குழுமம்,போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் மாயாராஜலட்சுமி தலைமையிலான போலீசார் தந்தையை கைது செய்தனர். இந்த வழக்கு தேனி மாவட்ட சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது.

குற்றவாளிக்கு ஐந்தாண்டுகள் சிறை, ரூ.10 ஆயிரம் அபராதம், கட்டத் தவறினால் ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி கணேசன் தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us