sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

நீதிமன்றம் அருகே பைனான்சியர் கொலை

/

நீதிமன்றம் அருகே பைனான்சியர் கொலை

நீதிமன்றம் அருகே பைனான்சியர் கொலை

நீதிமன்றம் அருகே பைனான்சியர் கொலை


ADDED : ஜன 24, 2025 05:24 AM

Google News

ADDED : ஜன 24, 2025 05:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்தமபாளையம்: உத்தமபாளையம் நீதிமன்றம் அருகில் பைனான்சியர் பிரசாந்த் 34, என்பவர் ஓட ஓட விரட்டி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

உத்தமபாளையம் பி.டி.ஆர். காலனியை சேர்ந்தவர் தொந்தி மகன் பிரசாந்த் 34, இவர் சொந்த ஊர் அனுமந்தன்பட்டி. 10 ஆண்டுகளுக்கு முன் உத்தமபாளையத்தில் குடியேறி பைனான்ஸ் தொழில் செய்தார்.

இதே காலனியை சேர்ந்த அனிஷ் ரகுமான் என்ற முனீஸ்வரன் 42 என்பவருக்கும் கொலை செய்யப்பட்டவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இருவருக்கும் இடையே பல முறை தகராறு நடந்துள்ளது.

இந்நிலையில் நேற்று காலை 8:00 மணியளவில் உத்தமபாளையம் நீதிமன்றம் முனீஸ்வரன் கோயிலில் அருகில் பிரசாந்த் நின்று கொண்டிருந்துள்ளார். அங்கு வந்த அனிஷ், 'எனது குடும்பத்தை கெடுத்த உன்னை, கொல்லாமல் விட மாட்டேன்' என கூறி கத்தியால் குத்தியுள்ளார்.

இதில் பயந்து பிரசாந்த நீதிமன்றம் நோக்கி ஒடினார்.

பின் கோர்ட் அருகில் உள்ள லாட்ஜ் கார் நிறுத்தும் இடத்திற்குள் ஓடியுள்ளார். அவரை துரத்தி வந்த அனிஷ், லாட்ஜ் பகுதியில் உடலில் சரமாரியாக குத்தி கொலை செய்தார். கொலை செய்த அனிஷ் அங்கிருந்து தப்பியோடினார்.

உத்தமபாளையம் டி.எஸ்.பி. செங்கோட்டு வேலன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us