sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 23, 2025 ,ஐப்பசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

வைகை அணை நீர் தேக்கத்தில் தீயணைப்பு துறை பேரிடர் ஒத்திகை

/

வைகை அணை நீர் தேக்கத்தில் தீயணைப்பு துறை பேரிடர் ஒத்திகை

வைகை அணை நீர் தேக்கத்தில் தீயணைப்பு துறை பேரிடர் ஒத்திகை

வைகை அணை நீர் தேக்கத்தில் தீயணைப்பு துறை பேரிடர் ஒத்திகை


ADDED : ஆக 29, 2025 03:39 AM

Google News

ADDED : ஆக 29, 2025 03:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி: மழைக்காலத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி வைகை அணை நீர் தேக்கப் பகுதியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் நடந்தது. தேனி கலெக்டர் ரஞ்ஜீத் சிங் நீர் தேக்கப்பகுதியில் படகில் சென்று ஒத்திகை நிகழ்ச்சியை பார்வையிட்டார்.

வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் தேனி மாவட்டத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் பேரிடர் ஒத்திகை நடந்தது. பள்ளி மாணவர்கள் முன்னிலையில் மழைக்காலங்களில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்தும் வெள்ளத்தில் சிக்கியவர்கள் தாமாகவே தப்பிப்பது குறித்தும் தீயணைப்பு துறை வீரர்கள் செயல் விளக்கம் காட்டினர். மனித உருவம் கொண்ட பொம்மையை நீர்த்தேக்கத்தில் விட்டு அதனை தீயணைப்பு துறையினர் படகில் சென்று மீட்பது போன்று செயல் விளக்கம் காட்டப்பட்டது.

வீட்டை வெள்ளம் சூழும் போது வீட்டில் உள்ள பொருட்களை வைத்து தப்பிக்கும் முறை குறித்தும் விளக்கப்பட்டது. தீயணைப்புத்துறை வீரர்களுடன் தேனி கலெக்டர் படகில் சென்று நிகழ்ச்சிகளை பார்வையிட்டார். பேரிடர் காலங்களில் மக்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள, அரசு நடத்தும் இது போன்ற ஒத்திகை நிகழ்ச்சிகளை பார்வையிட்டு பொதுமக்கள் விழிப்புடன் இருக்க கலெக்டர் அறிவுறுத்தினார். தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மாவட்ட அலுவலர் ஜெகதீஷ் , மாவட்ட உதவி அலுவலர் குமரேசன், நீர் வளத்துறை அதிகாரிகள் சேகரன், பரதன், ராஜாங்கம் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பள்ளி மாணவர்கள் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us