ADDED : ஜூலை 10, 2026 03:26 AM
அ நிறம் | அளவு
தேனி: தேனி மீறுசமுத்திரம் கண்மாய் வடக்கு கரையில் கருமாரியம்மன் கோயில் முன் குப்பை கொட்டப்படுகிறது.
நேற்று முன்தினம் இரவு குப்பையில் பற்றிய தீ நேற்று காலை வரை எரிந்தது. இதனால் எழுந்த கரும்புகையால் முதியோர்கள், குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. தகவலின்பேரில் நேற்று காலை தேனி தீயணைப்பு நிலைய அலுவலர் நாகராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சென்று தீயை அணைத்தனர்.
