sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மதம் பிடித்த அறிகுறியுடன் நடமாடும் சக்சை கொம்பன் வனத்துறை தீவிர கண்காணிப்பு

/

மதம் பிடித்த அறிகுறியுடன் நடமாடும் சக்சை கொம்பன் வனத்துறை தீவிர கண்காணிப்பு

மதம் பிடித்த அறிகுறியுடன் நடமாடும் சக்சை கொம்பன் வனத்துறை தீவிர கண்காணிப்பு

மதம் பிடித்த அறிகுறியுடன் நடமாடும் சக்சை கொம்பன் வனத்துறை தீவிர கண்காணிப்பு


ADDED : ஜூலை 06, 2025 04:08 AM

Google News

ADDED : ஜூலை 06, 2025 04:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு: சக்கை (பலாப்பழம்) கொம்பன் ஆண் காட்டு யானை மதம் பிடித்த அறிகுறியுடன் நடமாடுவதால் வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

மூணாறு அருகே சின்னக்கானல், சாந்தாம்பாறை ஊராட்சிகளில் பத்துக்கும் மேற்பட்டோரின் உயிரை பறித்ததுடன், பல சேதங்களை ஏற்படுத்திய அரிசி கொம்பன் ஆண் காட்டு யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து தமிழகத்தில் களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகத்தில் விட்டனர்.

அதன்பிறகு அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்த நிலையில், அதே பாணியில் சக்கை கொம்பன் எனும் ஆண் காட்டு யானை நடமாடி வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் மீண்டும் நிம்மதி இழந்தனர்.

தற்போது அந்த யானை மதம் பிடித்த அறிகுறியுடன் நடமாடி வருகிறது. குறிப்பாக சின்னக்கானல், ஆனயிரங்கல் அணை உட்பட பல்வேறு பகுதிகளில் முகாமிட்டு சுற்றித்திரிகிறது. அதனை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us