sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

ஏ.டி.எம்.,ல் கொட்டிய ரூ.47,500; போலீசில் ஒப்படைத்த நண்பர்கள்

/

ஏ.டி.எம்.,ல் கொட்டிய ரூ.47,500; போலீசில் ஒப்படைத்த நண்பர்கள்

ஏ.டி.எம்.,ல் கொட்டிய ரூ.47,500; போலீசில் ஒப்படைத்த நண்பர்கள்

ஏ.டி.எம்.,ல் கொட்டிய ரூ.47,500; போலீசில் ஒப்படைத்த நண்பர்கள்


ADDED : நவ 30, 2024 06:18 AM

Google News

ADDED : நவ 30, 2024 06:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம்; தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ஸ்டேட் பாங்க் ஏ.டி.எம்.,மில் கார்டு செலுத்துவதற்கு முன் இயந்திரத்திலிருந்து கொட்டிய ரூ.47,500 ஐ நண்பர்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். பிறகு அப்பணம் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பெரியகுளம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த டிராக்டர் டிரைவர் சுந்தர் 27. இவரது நண்பர் தங்கப்பாண்டி 28. இருவரும் பெரியகுளம்- வைகை அணை ரோடு ஸ்டேட் பாங்க் ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க சென்றனர்.

சுந்தர் கார்டை இயந்திரத்தில் செலுத்த முயன்றபோது அதில் இருந்து 95 ரூ.500 நோட்டுக்கள் மொத்தம் ரூ.47,500 கொட்டியது. அதை இருவரும் டி.எஸ்.பி., நல்லுவிடம் ஒப்படைத்தனர்.

அப்பணம் பெரியகுளம் குருசடி தெருவைச் சேர்ந்த ஆசிரியர் ராஜ்குமார் 48, உறவினருக்கு பணம் செலுத்த மிஷினில் செலுத்திய போது வெளியே வந்தது கண்காணிப்பு கேமரா வழியாக உறுதி செய்யப்பட்டது. போலீஸ் விசாரணையிலும் இந்த தகவல் உறுதியானது. பின் பணம் ராஜ்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது. பணத்தை ஒப்படைத்த தங்கப்பாண்டி, அவரது நண்பரை டி.எஸ்.பி., மற்றும் போலீசார் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us