ADDED : பிப் 23, 2026 06:10 AM

தேனி: தேனிசமதர்மபுரம் காமராஜர் பூங்கா அருகே குப்பையில் தீ வைப்பதால் அப் பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
தேனி சமதர்மபுரம் காமராஜர் பூங்காவை குழந்தைகள் உள்பட பலரும் பயன்படுத்துகின்றனர். பூங்காவின் தெற்கு பகுதியில் குடியிருப்போர் கொட்டும் குப்பை குவிந்துள்ளது. இதனை நகராட்சி துப்புரவு பணியாளர்கள் உடனுக்குடன் அகற்றாததால் பெருமளவு குப்பை தேங்கி சுகாதார கேடு நிலவுகிறது. இதனால் குப்பைக்கு அப்பகுதியில் தீ வைக்கின்றனர். அதிலிருந்து வெளியேறும் கரும்புகை அப்பகுதியினருக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. இச் சம்பவம் அடிக்கடி நடக்கிறது.
தீ எரியும் பகுதியில் காய்ந்த இலைகள் பரவிகிடப்பதால் இலைகளில் பற்றி தெருவில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களுக்கு தீ பரவும் அபாயம் உள்ளது.
குப்பையில் எரியும் தீயால் ஏற்படும் புகை அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளையும், குடியிருப்போர்களையும் சிரமப்படுத்துகிறது. தினமும் அப்பகுதியில் குப்பை அகற்றிட நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

