/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சிறுமி கர்ப்பம்: 5 பேர் மீது போக்சோ
/
சிறுமி கர்ப்பம்: 5 பேர் மீது போக்சோ
ADDED : ஏப் 23, 2025 07:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம் : பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 18 வயது பூர்த்தியடையாத சிறுமிக்கும், பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டியைச் சேர்ந்த முத்துவேல் 31. என்பவருக்கும் கடந்தாண்டு திருமணம் நடந்தது. தற்போது சிறுமி 3 மாதம் கர்ப்பமாக உள்ளார்.
தகவல் அறிந்த பெரியகுளம் ஒன்றிய விரிவாக்க அலுவலர் வாசுகி விசாரணை நடத்தினார்.
அவரது புகாரில் சிறுமியை திருமணம் செய்த முத்துவேல், அவரது தந்தை முருகன், தாய் சின்னப்பிள்ளை, சிறுமியின் தந்தை கோவிந்தராஜ், தாய் பெரியநாச்சி ஆகியோர் மீது போக்சோ சட்டப்பிரிவில் பெரியகுளம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.-