நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : சமூகநலத்துறை சார்பில் பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அரசு ஆதிதிராவிடர் நல பள்ளி மாணவியர் விடுதி, பிற்படுத்தப்பட்டோர் நல பள்ளி மாணவியர் விடுதியில் தங்கி பயிலும் 100 மாணவிகள் சுற்றுலாவிற்கு தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்கள் சென்ற சுற்றுலா பஸ்சை தேனியில் கலெக்டர் ஷஜீவனா வழி அனுப்பிவைத்தார். மாணவிகள் கீழடி அருங்காட்சியகம், மதுரையில் உள்ள கருணாநிதி நினைவு நுாற்றாண்டு நுாலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
நிகழ்வில் மாவட்ட சமூக நல அலுவலர் ஷியமளா தேவி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் வெங்கடாசலம், ஆதிதிராவிடர் நல அலுவலர் சசிகலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.