ADDED : ஏப் 04, 2025 05:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் வழங்கிய மனுவை பெற மறுத்த பெரம்பலுார் கலெக்டரை கண்டித்து சங்கம் சார்பில் மாவட்டத்தில் தேனி, ஆண்டிபட்டி, கம்பம், போடி, உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன் மதிய உணவு இடைவெளியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாலை கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தாஜூதீன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் முத்துக்குமார், ரவிக்குமார், தமிழ்பரமன், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட துணைத்தலைவர் நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

