sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

சிறார்களிடம் அத்துமீறிய இருவர் மீது குண்டாஸ்

/

சிறார்களிடம் அத்துமீறிய இருவர் மீது குண்டாஸ்

சிறார்களிடம் அத்துமீறிய இருவர் மீது குண்டாஸ்

சிறார்களிடம் அத்துமீறிய இருவர் மீது குண்டாஸ்


ADDED : ஜூலை 30, 2025 12:27 AM

Google News

ADDED : ஜூலை 30, 2025 12:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : சிறார்களிடம் அத்துமீறிய இருவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ரஞ்ஜீத்சிங் உத்தரவிட்டார்.

உத்தமபாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் 16 வயது சிறுமிக்கு அவரது உறவினர் பாலியல் தொல்லை அளித்தார். அவர்மீது சிறுமியின் பெற்றோர் உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் அந்த நபரை போலீசார் ஜூன் 23ல் கைது செய்தனர். நீதிமன்ற காவலில் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். அதே போல் கூடலுார் பகுதியில் ஓட்டல் உரிமையாளரான 45 வயது நபர் அவரது உறவினரின் 7 வயது மகன், 8 வயது மகள் ஆகிய இருவருக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறாரின் தாய் உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ஜூன் 25ல் ஓட்டல் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். அவரும் மாவட்ட சிறையில் உள்ளார்.சிறார்களிடம் அத்துமீறிய இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி., சினேஹா பிரியா கலெக்டர் ரஞ்ஜீத்சிங்கிற்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us