/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போலீஸ் கூட்டுறவு சங்கம் டிவிடெண்ட் வழங்குவதால் மகிழ்ச்சி; கடந்த ஆண்டில் ரூ. ஒரு கோடி லாபம் ஈட்டி சாதனை
/
போலீஸ் கூட்டுறவு சங்கம் டிவிடெண்ட் வழங்குவதால் மகிழ்ச்சி; கடந்த ஆண்டில் ரூ. ஒரு கோடி லாபம் ஈட்டி சாதனை
போலீஸ் கூட்டுறவு சங்கம் டிவிடெண்ட் வழங்குவதால் மகிழ்ச்சி; கடந்த ஆண்டில் ரூ. ஒரு கோடி லாபம் ஈட்டி சாதனை
போலீஸ் கூட்டுறவு சங்கம் டிவிடெண்ட் வழங்குவதால் மகிழ்ச்சி; கடந்த ஆண்டில் ரூ. ஒரு கோடி லாபம் ஈட்டி சாதனை
ADDED : அக் 16, 2024 04:08 AM
பெரியகுளம் : தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் காவலர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள போலீசாருக்கு லாபத்தில் பங்கு (டிவிடெண்ட்) தொகை அக்.22 முதல் வழங்கப்பட உள்ளது. இத்தொகை பண்டிகை செலவுக்கு உதவியாக இருக்கும் என போலீசார் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் தேனி, பெரியகுளம்,ஆண்டிபட்டி,போடி,கம்பம் ஆகிய ஐந்து சப்- டிவிஷன்களுக்கு உட்பட்ட 31 போலீஸ் ஸ்டேஷன்கள், 5 புறக்காவல் நிலையங்கள் உள்ளது.
இதில் பணியாற்றும் போலீசார்கள் முதல் இன்ஸ்பெக்டர்கள், வரை தேனி என்.ஆர்.டி., நகரில் செயல்படும் காவலர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் 600க்கும் அதிகமானோர் உறுப்பினர்களாக உள்ளனர். சங்க உறுப்பினர்களுக்கு குறைந்த வட்டியில் வீடு கட்டுவதற்கு ரூ. 3 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.
கடன் வழங்கும் தொகையில் 10 சதவீதம் பிடித்தம் செய்து கடன் முடியும் தருவாயில் அசலில் வரவைத்து கணக்கு முடிக்கப்படும். கடன் தவணையை சம்பளத்தில் பிடித்தம் செய்து வரவு வைப்பதால் வங்கி லாபகரமாக இயங்கி வருகிறது. கடந்த ஆண்டு இச் சங்கம் ரூபாய் ஒருகோடி வரை லாபம் ஈட்டி சாதனை படைத்துள்ளது.
இவ்வாறு பிடித்தம் செய்யப்படும் பணம் ஒவ்வொரு ஆண்டும், தீபாவளி பண்டிகைக்கு இரு வாரங்களுக்கு முன்பு பங்குத் தொகை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும். இதில் குறைந்தபட்சம் ரூ. 7 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை ஒவ்வொருவரும் பணம் கிடைக்கும்.
கடந்த தீபாவளி பண்டிகை காலத்தில் டிவிடெண்ட் வழங்கப்படவில்லை. இதனால் போலீசார்கள் அதிருப்தி அடைந்தனர்.
பொங்கல் பண்டிகைக்கு பிறகே வழங்கப்பட்டது. இதனால் தற்போது வங்கி நிர்வாகம் அக்.22 முதல் பணம் பெற்றுக் கொள்ளலாம் எனஅறிவித்துள்ளது.
இதனால் புத்தாடை உட்பட பல்வேறு பொருட்கள் வாங்கலாம் என போலீசார் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வங்கியில் தற்போது ரூபாய் ஒருகோடிக்கு மேல் பட்டுவாடா செய்ய தயார் நிலையில் உள்ளனர்.-