sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

போடியில் கனமழை: விவசாயிகள் மகிழ்ச்சி

/

போடியில் கனமழை: விவசாயிகள் மகிழ்ச்சி

போடியில் கனமழை: விவசாயிகள் மகிழ்ச்சி

போடியில் கனமழை: விவசாயிகள் மகிழ்ச்சி


ADDED : அக் 04, 2024 07:06 AM

Google News

ADDED : அக் 04, 2024 07:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி : போடி பகுதியில் நேற்று மதியம் பலத்த காற்று இடியுடன் பெய்த கன மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கொட்டகுடி ஆற்றில் நீர்வரத்து வர துவங்கியது.

போடி பகுதியில் சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்தது. கடந்த மாதம் பெய்த மழையால் மானாவாரி நிலங்களில் நிலக்கடலை, தட்டப் பயறு, அவரை உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து இருந்தனர். பயிர்கள் வளர்ந்த நிலையில் மழை இன்றி வெயிலின் தாக்கம் அதிகரித்தது. இதனால் மழையை எதிர் நோக்கி விவசாயிகள் காத்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று மதியம் 3 :15 மணிக்கு போடி, குரங்கணி, கொட்டகுடி, சிலமலை, சூலப்புரம், ராசிங்காபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. இதனால் வறண்டு கிடந்த பூமி குளிர்ச்சி அடைந்தது. போடி காமராஜ் பஜார், போஜன் பார்க், உள்ளிட்ட மெயின் ரோடுகளில் மழைநீர் ஓடை போல பெருக்கெடுத்து சென்றது. மலைப் பகுதியில் பெய்த கன மழையால் கொட்டகுடி ஆற்று பகுதியில் நீர்வரத்து வர துவங்கியது.

தொடர்ந்து மழை 4 மணி வரை தொடர்ந்தது. இதனால் மழையை எதிர் பார்த்து காத்து கிடந்த விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.






      Dinamalar
      Follow us