sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

வைகை அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு

/

வைகை அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு

வைகை அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு

வைகை அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு


ADDED : பிப் 11, 2025 07:49 AM

Google News

ADDED : பிப் 11, 2025 07:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி : வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் 2ம் போக பாசனத்திற்கு கால்வாய் வழியாக டிச.18 முதல் வைகை அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளது. முறைப்பாசனம் நடைமுறையில் இருப்பதால் அணையில் திறக்கப்பட்ட நீர் பிப். 6ல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. விருதுநகர் மாவட்டம், கிருதுமால் நதி குடிநீர் தேவைக்காக பிப். 6 முதல் வைகை அணையில் இருந்து வினாடிக்கு 300 கன அடி வீதம் தண்ணீர் ஆற்றின் வழியாக செல்கிறது.

இந்நிலையில் முறைப்பாசன அடிப்படையில் நிறுத்தப்பட்ட நீர் நேற்று காலை 6:00 மணிக்கு வினாடிக்கு 450 கன அடி வீதம் கால்வாய் வழியாக மீண்டும் திறந்து விடப்பட்டுள்ளது. அணையின் நீர் மட்டம் 64.70 அடி (மொத்த உயரம் 71 அடி). மதுரை, தேனி, ஆண்டிபட்டி --------------- சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் வழக்கம் போல் செல்கிறது. இதனைத் தொடர்ந்து அணையில் இருந்து வெளியேறும் நீரின் மொத்த அளவு வினாடிக்கு 819 கன அடியாக உயர்ந்துள்ளது.






      Dinamalar
      Follow us