sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

சுருளி அருவியில் தர்ப்பணம் மண்டபம் கட்ட வலியுறுத்தல்

/

சுருளி அருவியில் தர்ப்பணம் மண்டபம் கட்ட வலியுறுத்தல்

சுருளி அருவியில் தர்ப்பணம் மண்டபம் கட்ட வலியுறுத்தல்

சுருளி அருவியில் தர்ப்பணம் மண்டபம் கட்ட வலியுறுத்தல்


ADDED : ஜூன் 15, 2025 06:50 AM

Google News

ADDED : ஜூன் 15, 2025 06:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம்,: சுருளி அருவியில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பவர்கள், ஆற்றங்கரையில் அமர்ந்து கொடுக்க வசதியாக, மண்டபம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுற்றுலா தலமாகவும், ஆன்மிக தலமாகவும் இருப்பது சுருளி அருவி. இது தர்ப்பணம் கொடுப்பதற்கு ஏற்ற இடமாகும்.

குறிப்பாக தை, ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் இங்கு வந்து தர்ப்பணம் கொடுப்பார்கள். அந்த நாட்களில் இடநெருக்கடி ஏற்படும்.ஆற்றங்கரையில் உட்கார கூட இடம் கிடைக்காது. திறந்த வெளியில் அமர்ந்து தர்ப்பணம் கொடுக்கும் போது, மழை பெய்தால் மிகவும் சிரமமாகும்.

ஆற்றுப் பாலம் அருகில் தர்ப்பண மண்டபம் கட்ட கம்பம் ஊராட்சி ஒன்றியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாதுக்களும், மக்களும் கோரிக்கைவிடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us