sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 விவசாய அடையாள அட்டை பதிவு செய்ய அறிவுறுத்தல் கவுரவ நிதி உதவி நிறுத்த வாய்ப்பு

/

 விவசாய அடையாள அட்டை பதிவு செய்ய அறிவுறுத்தல் கவுரவ நிதி உதவி நிறுத்த வாய்ப்பு

 விவசாய அடையாள அட்டை பதிவு செய்ய அறிவுறுத்தல் கவுரவ நிதி உதவி நிறுத்த வாய்ப்பு

 விவசாய அடையாள அட்டை பதிவு செய்ய அறிவுறுத்தல் கவுரவ நிதி உதவி நிறுத்த வாய்ப்பு


ADDED : டிச 13, 2025 05:42 AM

Google News

ADDED : டிச 13, 2025 05:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: பிரதமரின் கவுரவ நிதி உதவி திட்டத்தில் பயனடையும் விவசாயிகள் அடையாள அட்டை பெற பதிவு செய்யுமாறு வேளாண்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் பதிவு செய்யாத விவசாயிகளுக்கு அடுத்த தவணை நிறுத்தி வைக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தனர்.

வேளாண்துறையினர் கூறியதாவது: மாவட்டத்தில் பிரதமரின் கவுரத்தொகை வழங்கும் திட்டத்தில் தற்போது 21வது தவணையில் 26,310 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இவர்களில் 22,661 பேர் விவசாயிகளுக்கான அடையாள அட்டை பெற பதிவு செய்துள்ளனர். வட்டாரம் வாரியாக ஆண்டிபட்டி 849, போடி 232, பெரியகுளம் 844, கடமலைக்குண்டு 563, தேனி 310, கம்பம் 197, சின்னமனுார் 357, உத்தமபாளையத்தில் 288 பேர் என மொத்தம் 3640 பேர் அடையாள அட்டை பதிவு செய்யாமல் உள்ளனர்.

அவர்களிடம் அடையாள அட்டை பதிவு செய்ய வலியுறுத்தியும், அதனால் ஏற்படும் பயன்கள் பற்றியும் விளக்கி வருகிறோம். இந்த அடையாள அட்டைக்கு பதிவு செய்யாவிட்டால் 22 வது தவணை கவுரத்தொகை நிறுத்தி வைக்க வாய்ப்புள்ளது.விவசாயிகள் அடையாள அட்டை பெற விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள வேளாண், தோட்டக்கலை அலுவலரை அணுகலாம் என்றனர்.






      Dinamalar
      Follow us