ADDED : பிப் 14, 2026 05:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்: கூடலுாரில் சில மாதங்களுக்கு முன் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப் பட்டது. பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேனரை பிடித்து கோஷமிட்டவாறு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்றனர். இது தவிர விழிப்புணர்வு கூட்டங்களும் நடத்தப்பட்டன.
சமீபத்தில் மக்கள் கூடும் இடங்களில் போதை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு பிரசாரங்களும் மேற்கொள்ளப்பட்டன.
இருந்த போதிலும் கூடலுாரில் உள்ள ஏராளமான கடைகளில் போதை புகையிலை அதிகம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவ்வப்போது பெயரளவில் ஒரு சில கடைகளில் மட்டும் போலீசார் சோதனை மேற்கொண்டு போதை புகையிலை பறிமுதல் செய்கின்றனர். தொடர்ந்து நடவடிக்கை எடுக்காததால் விற்பனை மீண்டும் நடப்பது அதிகரித்து வருகிறது.

