sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

வைகை அணையில் பாசன நீர் நிறுத்தம்

/

வைகை அணையில் பாசன நீர் நிறுத்தம்

வைகை அணையில் பாசன நீர் நிறுத்தம்

வைகை அணையில் பாசன நீர் நிறுத்தம்


ADDED : மார் 24, 2025 12:54 AM

Google News

ADDED : மார் 24, 2025 12:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி : வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்கு கால்வாய் வழியாக திறக்கப்பட்ட நீர் நேற்று காலை நிறுத்தப்பட்டது.

இம்மாவட்டங்களின் 2ம் போக பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து டிச. 18 முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டது. தண்ணீர் சிக்கனத்தை கருத்தில் கொண்டு முறைப்பாசனம் நடைமுறையில் உள்ளது.

அணையில் இருந்து சில நாட்கள் நீர் திறந்து விடப்பட்டும், சில நாட்கள் நிறுத்தியும் வைக்கப்படுகிறது. மார்ச் 17ல் வினாடிக்கு 650 கன அடி வீதம் வைகை அணையில் திறக்கப்பட்ட நீர் நேற்று காலை 6:00 மணிக்கு நிறுத்தப்பட்டது.

அணை நீர்மட்டம் 58.40 அடியாக இருந்தது. (மொத்த உயரம் 71 அடி). நீர்வரத்து வினாடிக்கு 33 கன அடி. மதுரை, தேனி, ஆண்டிப்பட்டி - சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 72 கன அடி நீர் வழக்கம்போல் வெளியேறுகிறது.






      Dinamalar
      Follow us