/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாநில தடகள போட்டிகளில் அசத்திய ஐ.டி.ஐ., மாணவர்கள்
/
மாநில தடகள போட்டிகளில் அசத்திய ஐ.டி.ஐ., மாணவர்கள்
ADDED : மார் 27, 2025 05:15 AM

தேனி: தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில்மாநில அளவிலான தடகளப்போட்டிகளில் ஐ.டி.ஐ., மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.ஐ.டி.ஐ.,களுக்கிடையிலான மாநில அளவிலான போட்டிகள் நடக்கிறது.
நேற்று மாணவர்களுக்கான தடகளப்போட்டிகள் நடந்தது. சென்னை, விழுப்புரம், திருச்சி, கோவை, மதுரை, திருநெல்வேலி, சேலம் மண்டலங்களில் இருந்து 171 மாணவர்கள் பங்கேற்றனர். 100 மீட்டர் ஓட்டத்தில் ஓசூர் அரசு ஐ.டி.ஐ., மாணவர் சதீஸ்குமார், நீளம் தாண்டுதல், 200 மீ., 400 மீ., ஓட்டத்தில் போடி அரசு ஐ.டி.ஐ., சுகுமாறன், 800 மீ., ஓட்டத்தில் சேரன்மாதேவி தனியார் எஸ்.சி.,ஏ.டி., ஐ.டி.ஐ., சிவபாஸ்கர், 1500 மீ., ஓட்டத்தில் ராஜபாளையம் ராம்கோ ஐ.டி.ஐ., ராமசந்திரன், ஈட்டி எறிதல் போட்டியில் பண்ருட்டி சக்தி ஐ.டி.ஐ., தணிகைசெல்வம், குண்டு எறிதலில் போடி அரசு ஐ.டி.ஐ., சரவணன், தட்டு எறிதலில் எரக்குடி ராமசாமி செல்லப்பு ஐ.டி.ஐ., குமரன் முதலிடம் வென்றனர். 400 மீ., தொடரோட்டத்தில் நாமக்கல் அரசு ஐ.டி.ஐ., முதலிடம் வென்றது. தனிநபர் போட்டிகளில் ஓவர் ஆல் சாம்பியன் பட்டத்தை மதுரை மண்டலம் வென்றது. பரிசளிப்பு விழாவில் மதுரை மண்டல பயிற்சி இணை இயக்குநர் மகேஸ்வரன், தேனி அரசு ஐ.டி.ஐ., முதல்வர் சேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இன்று மாணவிகளுக்கான குழு, தடகள போட்டிகள் நடக்கிறது.