ADDED : டிச 11, 2025 06:25 AM

தேனி: தேனி காமதேனு நிறுவன உரிமையாளர் மாரிச்சாமி - மகேஸ்வரி தம்பதியின் மகன் டாக்டர் கவுதம், சண்முகநாதன் -- சுஜாதா தம்பதியின் மகள் ஷ்ப்னலெட்சுமி திருமண விழா திருமண மண்டபத்தில் நடந்தது.
மணமக்களை முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம், தேனி எம்.பி., தங்கதமிழ்செல்வன், எம்.எல்.ஏ.,க்கள் சரவணக்குமார், மகாராஜன், தேனி நகராட்சித் தலைவர் ரேணுப்பிரியா, நகர் வடக்கு தி.மு.க, பொறுப்பாளர் பாலமுருகன், நகராட்சித் துணைத் தலைவர் செல்வம், பெரியகுளம் சிவக்குமார், அ.தி.மு.க,, கிழக்கு மாவட்டச் செயலாளர் ராமர், முன்னாள் ஆவின் தலைவர் ராஜா, அ.தி.மு.க., மாநில கொள்கை பரப்புச் செயலாளர் நாராயணசாமி,
பழனிசெட்டிபட்டி பேரூராட்சித் தலைவர் மிதுன்சக்கரவர்த்தி, துணைத் தலைவர் மணிமாறன் உள்ளிட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள், தொழில் உரிமையாளர்கள் சன்னாசி, ராஜசேகரன், முரளி, ராம்மோகன், வைருசாமி, அழகேசன், அய்யப்பன், லோகநாதன், வசந்த், நக்கீரன், பெரியணன், செல்வம், சுந்தரம், கனகராஜ், முருகன், காமராஜ், அசோக், ராஜேஸ்கண்ணன், மணிகண்டன், சிங்கப்பூர் டத்தோ வெள்ளையன், நல்லியண்ணன் உள்ளிட்டோரும், வழக்கறிஞர்கள் தெய்வேந்திரன், கவுதம், சீனிவாசன் உள்ளிட்ட பலர் வாழ்த்தினர்.

