ADDED : ஏப் 26, 2025 05:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி : போடி அருகே மேலச்சொக்கநாதபுரம் தொட்டராயன் கோயில் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார் 32.
இவர் போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே கோயில் திருவிழாவின் போது அனுமதி இன்றி கூம்பு வடிவ ஒலி பெருக்கியை பயன் படுத்தி உள்ளார். இதனால் பொது மக்களுக்கு இடையூறு எற்பட்டுள்ளது. போடி டவுன் போலீசார் முத்துக்குமாரை கைது செய்ததோடு, கூம்பு வடிவ ஒலி பெருக்கியை பறிமுதல் செய்தனர்.

