ADDED : மே 23, 2025 04:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் வடகரை வைத்தியநாதபுரத்தைச் சேர்ந்தவர் பெருமாள்பாண்டி 34.
இவருக்கும் டி.கள்ளிப்பட்டி பாரதிதாசன் தெருவைச் சேர்ந்த ராஜ்குமார் 32. என்பவருக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் இருந்து வந்தது.
இதில் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. இந்நிலையில் ராஜ்குமார் வீட்டிற்கு சென்ற பெருமாள்பாண்டி, ராஜ்குமார் வெளியே சென்ற நிலையில், அவரது தாயார் பாண்டியம்மாளை 55. அவதூறாக பேசியுள்ளார். புகாரில் தென்கரை போலீசார் பெருமாள்பாண்டியை கைது செய்தனர்.