sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கள்ளக்காதலியின் கணவரை கொலை செய்தவருக்கு இரட்டை ஆயுள்

/

கள்ளக்காதலியின் கணவரை கொலை செய்தவருக்கு இரட்டை ஆயுள்

கள்ளக்காதலியின் கணவரை கொலை செய்தவருக்கு இரட்டை ஆயுள்

கள்ளக்காதலியின் கணவரை கொலை செய்தவருக்கு இரட்டை ஆயுள்


ADDED : ஜூன் 06, 2025 03:00 AM

Google News

ADDED : ஜூன் 06, 2025 03:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி:தேனி மாவட்டம் கூடலுாரில் தகாத உறவை தட்டிக்கேட்ட கணவர் அருண்குமாரை 35, அவரது மனைவியுடன் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்த கள்ளக்காதலன் ஜெயச்சந்திரனுக்கு 30, இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கூடலுார் குள்ளப்பக்கவுண்டன்பட்டி பங்களாமேடு தெரு துணி வியாபாரி ராணி. இவரது மகன்அருண்குமாருக்கும், அல்லிநகரம் சுந்தரம் மகள் வைஷ்ணவிக்கும் 32, எட்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. அருண்குமார் குள்ளப்பக்கவுண்டன்பட்டியில் மனைவி, மகளுடன் வசித்தார். இந்நிலையில் வைஷ்ணவியின் சித்தி மகன் பாலமுருகனுக்கும் அதே ஊர் குபேந்திரன் மகள் ஜெயலட்சுமிக்கும் திருமணம் நடந்தது.

இதனால் குபேந்திரன் மகன் ஜெயச்சந்திரன், அருண்குமார் வீட்டிற்கு அடிக்கடிவந்து சென்றார். இதில் ஜெயச்சந்திரனுக்கும், வைஷ்ணவிக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதனை அறிந்த அருண்குமார் மனைவியை கண்டித்தார். ஆனாலும் அவர்களின் பழக்கம்தொடர்ந்தது.

கழுத்தை நெரித்து கொலை


இந்நிலையில் 2021 ஏப்.23 இரவு 9:30 மணிக்கு கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அருண்குமாரின் தாய் ராணி சமாதானம் செய்தார். மறுநாள் அதிகாலை 1:00 மணிக்கு மகன் வீட்டில் விளக்கு எரிவதை பார்த்து தாய் அங்கு சென்றபோது வைஷ்ணவி, சுடிதாரின் ஷால் மூலம் அருண்குமாரின் வாயை துடைத்து கொண்டிருந்தார். ஜெயச்சந்திரன் காலை பிடித்து கொண்டிருந்தார். அருகில் சென்று பார்த்த போது அருண்குமார் கழுத்து முகத்தில் காயத்துடன் இறந்து கிடந்தார். வைஷ்ணவி, ஜெயச்சந்திரனை கூடலுார் தெற்கு போலீசார் பிடித்து விசாரித்தனர். இருவரும் அருண்குமாரை கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரிந்தது. இருவரும் கைதான நிலையில் நிபந்தனை ஜாமினில் வந்த வைஷ்ணவி 2021 அக்.10ல் துாக்கிட்டு தற்கொலை செய்தார். கொலை வழக்கு விசாரணை தேனி முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது. ஜெயச்சந்திரனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை , ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சொர்ணம் ஜெ.நடராஜன் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் பாஸ்கரன் ஆஜரானார்.






      Dinamalar
      Follow us