ADDED : பிப் 18, 2024 01:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடமலைக்குண்டு: கண்டமனூர் அருகே கணேசபுரம் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
வட்டார கல்வி அலுவலர் சரஸ்வதி தலைமை வைத்தார். தலைமை ஆசிரியர் கண்ணன் வரவேற்றார். மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஜான்சன், கடமலைக்குண்டு - மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சித்ரா, மாவட்ட கல்வி கூடுதல் திட்ட அலுவலர் மோகன், வட்டார கல்வி அலுவலர் அருண்குமார் ஆகியோர் வாழ்த்திப்பேசினர். மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.