sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மூலமற்றம் நீர்மின் நிலையம் பராமரிப்பு முதன் முறையாக ஒரு மாதம் மூட முடிவு

/

மூலமற்றம் நீர்மின் நிலையம் பராமரிப்பு முதன் முறையாக ஒரு மாதம் மூட முடிவு

மூலமற்றம் நீர்மின் நிலையம் பராமரிப்பு முதன் முறையாக ஒரு மாதம் மூட முடிவு

மூலமற்றம் நீர்மின் நிலையம் பராமரிப்பு முதன் முறையாக ஒரு மாதம் மூட முடிவு


ADDED : அக் 30, 2025 04:34 AM

Google News

ADDED : அக் 30, 2025 04:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு: மூலமற்றம் நீர்மின் நிலையம் பராமரிப்பு பணிகளுக்காக ஒரு மாதம் மூட முடிவு செய்யப்பட்டது.

இடுக்கி மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க இடுக்கி அணையின் தண்ணீரை கொண்டு மூலமற்றம் நீர் மின் நிலையத்தில் 6 ஜெனரேட்டர்கள் மூலம் 780 மெகாவாட் மின் உற்பத்தி நடக்கிறது. இந்த மின் நிலையத்தில் கேரளாவுக்கு தேவையான மின்சாரத்தில் 30 சதவீதம் உற்பத்தி செய்யப்படுகிறது.

கடந்த ஜூலையில் மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் செய்ய மின்வாரியத்தினர் திட்டமிட்டபோதும் பலத்த மழையால் கைவிட்டனர்.

தற்போது மின்நிலையத்தில் இரண்டு 'இன் டேக் வால்வு' கள் சீரமைக்க வேண்டும். அதற்கு தண்ணீர் வினியோகத்தை நிறுத்த வேண்டும். தவிர 5, 6, ஆகிய ஜெனரேட்டர்களில் பராமரிப்பு பணிகள் செய்ய வேண்டும். ஒரு இன் டேக் வால்வை சீரமைக்க 14 நாட்கள் வேண்டும். இரண்டு வால்வுகளை சீரமைக்க 28 நாட்கள் தேவை என்பதால் நவ.11 முதல் டிச.10 வரை ஒரு மாதம் மின் நிலையத்தை மூடுவதற்கு அதிகாரிகள் முடிவு செய்தனர். மின் நிலையம் மூடப்படுவதால் மாநிலத்தில் 780 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது.

ஆனால் மழை காலத்தில் பண்டமாற்று முறைப்படி டில்லி, பஞ்சாப், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட மின்சாரம், திரும்ப 5 சதவீதம் அதிகமாக கிடைக்கும் என்பதால் மின்பற்றாக்குறைக்கு வாய்ப்பு இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

நீர்மின் நிலையம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு 50 ஆண்டுகளுக்கு இடையே முதன்முறையாக ஒரு மாதம் மூடப்படுவது குறிப்பிடதக்கது.






      Dinamalar
      Follow us