sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மார்கழி திருப்பாவை சேவித்தல் நகர்வலம்

/

மார்கழி திருப்பாவை சேவித்தல் நகர்வலம்

மார்கழி திருப்பாவை சேவித்தல் நகர்வலம்

மார்கழி திருப்பாவை சேவித்தல் நகர்வலம்


ADDED : ஜன 08, 2024 05:13 AM

Google News

ADDED : ஜன 08, 2024 05:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : மாவட்ட சாத்தாத ஸ்ரீ வைஷ்ணவா புரோகிதர்கள் சங்கம் சார்பில், அல்லிநகரத்தில் மார்கழி திருப்பாவை சேவித்தல் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்வில் ஆண்டாள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேர் நகர்வலம் வந்தது. அல்லிநகரம் சிவசக்தி விநாயகர் கோயிலில் துவங்கிய நகர்வலம் பெரியகுளம் ரோடு, பகவதிஅம்மன் கோயில் தெரு, வீரப்ப அய்யனார் கோயில் ரோடு வழியாக வரதராஜ பெருமாள் கோயில் சென்றது. நகர்வலத்தில் திருப்பாவை பாடல்கள் பாடியவாறு பக்தர்கள் பங்கேற்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மேட்டுக்கடை திருவேங்கட ஜோதி பட்டாச்சியார் தலைமை வகித்தார். அல்லிநகரம் சடகோப ராமனுஜ கோஷ்டியர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். பக்தர்களுக்கு வரதராஜப்பெருமாள் கோயிலில் பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை சங்க நிர்வாகி பார்த்த சாரதி தலைமையில் நந்தகுமார், ஜானகிராமன், வெங்கடேசன் செய்திருந்தனர்.

மார்கழி புஷ்பயாக பூஜை


போடி: சீனிவாசப் பெருமாள் கோயிலில் பெருமாளுக்கு மார்கழி புஷ்ப யாக சிறப்பு பூஜை நடந்தது. புஷ்ப யாகத்தை முன்னிட்டு அனைத்து விதமான பூக்களால் கோலம் அமைத்து, பெருமாளுக்கு சிறப்பு யாகமும், பூக்களால் சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகளும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளின் தரிசனம் பெற்றனர்.

ஏற்பாடுகளை தக்கார் மாரிமுத்து, புஷ்ப அலங்காரம், யாக பூஜைகளை கார்த்திக் பட்டாச்சாரியார் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us