/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் உயர்கிறது
/
முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் உயர்கிறது
ADDED : செப் 28, 2025 03:06 AM
கூடலுார்,:சில தினங்களாக மழையின்றி முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் குறைந்து வந்தது. நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி நீர்பிடிப்பான தேக்கடியில் 19.2 மி.மீ., பெரியாறில் 49.2 மி.மீ., மழை பதிவானது.
இதனால் அணைக்கு நீர்வரத்து 1152 கன அடியிலிருந்து வினாடிக்கு 1693 கன அடியாக அதிகரித்தது. நீர்மட்டம் உயர்ந்து 131.10 அடியாக இருந்தது (மொத்த உயரம் 152 அடி).
தமிழகப்பகுதிக்கு குடிநீர் மற்றும் முதல் போக நெல் சாகுபடிக்காக ஆயிரம் கன அடி திறக்கப்பட்டுள்ளது. நீர் இருப்பு 4954 மில்லியன் கன அடியாகும்.
நேற்று மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் உயரும் வாய்ப்புள்ளது.
தமிழகப் பகுதிக்கு திறக்கப்பட்ட தண்ணீர் மூலம் தேனி மாவட்டம் லோயர்கேம்ப் பெரியாறு நீர் மின் நிலையத்தில் மின் உற்பத்தி 90 மெகா வாட்டாக இருந்தது.