sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

வரி வசூலில் நகராட்சிகள் தீவிரம் காலையிலேயே களமிறங்கும் பணியாளர்கள்

/

வரி வசூலில் நகராட்சிகள் தீவிரம் காலையிலேயே களமிறங்கும் பணியாளர்கள்

வரி வசூலில் நகராட்சிகள் தீவிரம் காலையிலேயே களமிறங்கும் பணியாளர்கள்

வரி வசூலில் நகராட்சிகள் தீவிரம் காலையிலேயே களமிறங்கும் பணியாளர்கள்


ADDED : நவ 28, 2024 05:51 AM

Google News

ADDED : நவ 28, 2024 05:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம்: நகராட்சிகளில் வரி வசூலுக்காக காலை 8 மணிக்கே குழுக்களாக பிரிந்து அலுவலர்கள் வரி வசூலில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

நகராட்சிகளில் வீட்டு வரி, தொழில்வரி, குடிநீர் வரி, குத்தகை இனங்களுக்கான வரி, சேவை வரி உள்ளிட்ட பல வரி இனங்கள் மூலம் நிர்வாகம் நடத்தப்படுகிறது.

பணியாளர் சம்பளம், மின்கட்டணம், குடிநீர் பராமரிப்பு, வளர்ச்சி பணிகள் என அனைத்தும் இந்த வரிகளை நம்பியே உள்ளது. வரி இனங்கள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31 ம் தேதிக்குள் கட்டிக் கொள்ளலாம்.

பணியாளர்களும் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் கடைசி அல்லது ஜனவரியில் வரி வசூல் துவக்குவார்கள்.

இந்தாண்டு அரசு உத்தரவை சுட்டிக்காட்டி வரி வசூலை நவம்பர் முதல் வாரமே துவக்கி விட்டனர்.

நகராட்சிகளில் பணியாற்றும் அனைத்து அலுவலர்களும் பல குழுக்களாக பிரிந்து வசூலை தீவிரப்படுத்தி வருகின்றனர். காலை 8:00 மணிக்கே இந்த பணியை துவங்கி இரவு 8:00 மணி வரை வசூலிக்க வாய் மொழியாக கூறப்பட்டுள்ளது.

வழக்கமாக ஜனவரியில் தானே வருவீர்கள். இந்தாண்டு ஏன் நவம்பரில் வரி கேட்கிறீர்கள் என பொதுமக்கள் பலர் கேள்வி எழுப்புகின்றனர். 2025 மார்ச் வரை கால அவகாசம் உள்ளபோது ஏன் விரட்டுகிறீர்கள் என புலம்பி வருகின்றனர். வரி வசூலில் அதிகாரிகள் காட்டும் கெடுபிடி மக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us