/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மனைவியை கத்தியால் குத்திய கணவர் மீது கொலை வழக்கு
/
மனைவியை கத்தியால் குத்திய கணவர் மீது கொலை வழக்கு
ADDED : மே 28, 2025 07:27 AM
கடமலைக்குண்டு : கண்டமனூர் அருகே அடைக்கம்பட்டியை சேர்ந்தவர் அசோக்குமார் 41, கூலித் தொழிலாளி இவரது மனைவி ஜெகதீஸ்வரி 29, கடமலைக்குண்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்தார்.
இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். மனைவி ஜெகதீஸ்வரி மீது சந்தேகப்பட்ட அசோக்குமார் அவருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார்.
கடந்த மாதம் 20ம் தேதி அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், அசோக்குமார் கத்தியால் ஜெகதீஸ்வரி கழுத்தில் குத்தியதில் காயமடைந்த அவர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். போலீசார் அசோக்குமாரை கைது செய்தனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெகதீஸ்வரி சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.
இதனைத் தொடர்ந்து கண்டமனூர் போலீசார் அசோக் குமார் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.