ADDED : பிப் 09, 2024 07:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்: மதுரையைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜன் 70. 10 ஆண்டுகளாக குடும்பத்துடன் கூடலுார் பாரஸ்ட் பங்களா அருகே தனியார் தோட்டத்தில் தங்கி விவசாய வேலை செய்து வந்தார்.
நேற்று மாலை தோட்டத்திலிருந்து காஞ்சிமரத்துறை ரோட்டில் சைக்கிளில் சென்ற போது காஞ்சிமரத்துறையிலிருந்து கூடலுார் நோக்கி வந்த ஆட்டோ மோதியது. இதில் பலத்த காயமடைந்து கம்பம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். ஆட்டோ டிரைவர் சசிகுமாரை போலீசார் கைது செய்தனர்.

